தமிழகம், இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது: அமைச்சர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், புவனகிரி, நல்லூர், குறிஞ்சிப்பாடி, மங்களூர், காட்டுமன்னார்கோயில், கம்மாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,500 பயனாளிகளுக்கு, தமிழக அரசின் சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கலந்து கொண்டு, கர்ப்பிணிகளுக்கு தங்கம் மற்றும் நிதியுதவியை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், விலையில்லா அரிசி , தாலிக்கு தங்கம் வழங்குதல், கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்குதல், முதியோர் உதவித் தொகை போன்ற சிறப்பான திட்டங்கள் மூலம், தமிழகம், இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version