129-வது பிறந்தநாள்: அம்பேத்கரின் உருவப் படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 129-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால், வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தொண்டர்கள் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Exit mobile version