தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது மினி எமர்ஜென்சி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

தமிழகத்தில் மினி எமர்ஜென்சி நடந்து கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ராயபுரம் கிழக்கு மேற்கு திருவிக நகர் வடக்கு மற்றும் தெற்கு பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது இந்த கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் பூத் கமிட்டி வாரியாக நிர்வாகிகளுக்கு மகளிர் அணி மற்றும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு கையேடு வழங்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுகவின் பொது செயலாளராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சர் அமைச்சவை சந்தித்து தமிழ்நாட்டில் நடக்கிற பிரச்சனைகளை எடுத்துரைந்து ஒரு மினி எமர்ஜென்சி செயல்பட்டு வருவதாகவும் எடுத்துரைக்கப்பட்டது என கூறினார்

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 கொலைகள் நடந்துள்ளதாகவும் திமுக ஆட்சியில் மணல் மாஃபியாக்களுக்கு கொடி கட்டி பறக்குகின்றார்கள் தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழல் நிறைந்து கொண்டிருப்பதாகவும் இதனை மத்திய அரசு கவனத்தில் கொண்டு சென்று உள்ளோம்

சமீபத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் குறித்து மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம் இவை அனைத்தும் சிபிஐ இதனை எடுத்து விசாரிக்க வேண்டும் . இதைப்பற்றி இதுவரையில் முதலமைச்சர் மௌனம் காப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்து உள்ளார் என கூறினார்

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் 15 அமைச்சர்கள் துறை வாரியாக ஊழல் செய்துள்ளதாகவும் அதேபோல் தமிழக மின்துறை வாரியத்தில் இடி செய்த விசாரணை கைப்பற்றப்பட்ட 366 கோடி பற்றி அதே போன்று ஜி ஸ்கொயர் உள்ளிட்டவை பட்டியல் முழுவதும் மத்திய அரசிடம் வழங்கியிருக்கிறோம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்கள் என்றார்

கர்நாடகா சிவமோகா நகரில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கர்நாடக மாநில கீதத்தை பாட வைத்த பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா. அண்ணாமலை முன்னிலையில் அரங்கேறிய சம்பவம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு?
இந்தியா என்பது ஒரு மொழிக்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் . தமிழ்த்தாய் பாடலை பாதியில் நிறுத்தியது மிகவும் தவறானது ஒன்றும் . இதை நான் அண்ணாமலைக்காக மட்டும் சொல்லவில்லை இதனை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கூறினார்

ஓபிஎஸ் அதிமுகவினரை தொடர்ந்து விமர்சிப்பது ஒரு நாகரிகமற்ற செயலாகவும் திருச்சியில் நடந்த அவர் நடத்திய மாநாடு அது ஒரு பொதுக்கூட்டம் என்று விமர்சித்தனர் . 50 கோடி ரூபாய் செலவு செய்து கோழிக்கு ஆள் பிடித்து கூட்டிய கூட்டத்தை வைத்துக்கொண்டு பொதுக்கூட்டம் நடத்தி தங்களைப் பற்றி அவன் இவன் என்று விரக்தியில் பேசிய ஓ பன்னீர்செல்வத்துக்கு ஜெயக்குமார் கண்டனம்.

Exit mobile version