சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டது

சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினர். அதன்படி பொதுப்பணித் துறை அலுவலகத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவு இன்று திறக்கப்பட்டது.

நூற்றாண்டு விழா வளைவு சுமார் 66 அடி அகலம், 52 அடி உயரத்துடன் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்படும் இரண்டாவது வளைவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version