எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: பாதுகாப்பு பணியில் 17 ஆயிரம் போலீசார்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னையில் 17 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் விழாவை ஒட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்தவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 17 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விழா நடைபெறும் ஒய்எம்சிஏ மைதானத்திலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version