எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நூற்றாண்டு நினைவு வளைவு மெரினாவில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை இன்று விசாரித்த நீதிமன்றம், எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. விழா நடத்தாமல், நினைவு வளைவை திறக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version