மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர், மாயனூர் கதவணைக்கு வந்தது

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 10 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர், மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததை தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து, டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

திறந்து விடப்பட்ட தண்ணீரானது, கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது. மாயானூர் கதவணைக்கு வரும் தண்ணீர், விவசாய பயன்பாட்டிற்காக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version