தமிழக அரசின் அனுமதியின்றி மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்ட முடியாது – நிதின் கட்கரி

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்டப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.

காவிரி டெல்டா விவசாயிகளின் நலனில் மத்திய அரசு முழு அக்கறை கொண்டுள்ளதாக கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அனுமதி இல்லாமலும், அவர்களின் நலனிற்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் கர்நாடகாவால் எடுக்க முடியாது என கடிதத்தில் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version