வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிகள் தொடர்பான கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது பற்றி வட்டாட்சியர் விவரித்தார்.

Exit mobile version