Mee Too புகாரில் சிக்கினார் "ஆக்ஷன் கிங் அர்ஜுன்"

நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்துள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் அத்துமீறல் மற்றும் தவறான அணுகுமுறை ஆகியவற்றின் காரணமாக பாலிவுட் பிரபலங்கள் மீது  Mee Too என தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

வைரமுத்து தான் தமிழகத்தில் முதன்முறையாக  Mee Too விவகாரத்தில் சிக்கினார். பாடகி சின்மயி முதன்முறையாக இவர் மீது பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டினை நீதிமன்றம் சென்று முறையாக எதிர்கொள்ள தயாராக உள்ளதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இவரைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக், இயக்குநர் சுசி கணேசன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில் தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜூன் மீது ” Mee Too” புகார் வந்துள்ளது.

கன்னடத்தில் பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். நடிகர் அர்ஜூன் உடன் ‘விஸ்மயா’ என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இந்த புகாருக்கு இதுவரை நடிகர் அர்ஜூன் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version