News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்கள் பற்றி சர்ச்சை கருத்து – வைகோ கண்டனம் 

Web Team by Web Team
October 18, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாட நூலில் நாடார் சமூக மக்கள் பற்றி சர்ச்சை கருத்து – வைகோ கண்டனம் 
Share on FacebookShare on Twitter

 

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, 

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் பக்கம் 168 இல், சாதி மற்றும் மோதலும்; ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் பாடம் இடம்பெற்று இருக்கிறது.

2012 ஆம் ஆண்டு இதுபோன்று நாடார்குல மக்கள் மீது அவதூறு செய்யும் வகையில் சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்று இருந்தது. அதனை நீக்க வேண்டும் என்று 2012 அக்டோபர் 26 இல் நான் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தினேன். மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்தைக் கண்டித்தும், நாடார் மக்கள் மீது நஞ்சைக் கக்கும் பாடத்தை அறவே நீக்க வலியுறுத்தியும் 2012 நவம்பர் 2 ஆம் தேதி நாகர்கோவிலில், தலைமை அஞ்சலகம் எதிரே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.

இந்நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமுதாயத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், அதே பாடம் இடம்பெற்று இருக்கிறது.

தமிழகத்தின் வரலாற்றில் நாடார்குல மக்களுக்கு மேன்மையான சிறப்பு இருக்கிறது. பழந்தமிழர் பூமியான நாஞ்சில் நாட்டின் குமரி மாவட்டத்தை கேரளத்தோடு இணைப்பதற்கு வஞ்சக சதி நடந்தபோது, அதை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய வீர வரலாறு மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், தாணுலிங்க நாடார், நத்தானியர், பி.எஸ்.மணி, சிதம்பர நாடார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்ட பெருமக்களுக்கு உண்டு.

நாடார்குல பெருமக்கள் நாஞ்சில் நாட்டின் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். ஆனால், அவர்களை பிழைப்புத் தேடி இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று சி.பி.எஸ்.இ., பாடநூல் குறிப்பிடுகிறது. மேலும் பழம்பெருமை வாய்ந்த நாடார் சமூக மக்களை மதிப்புக் குறைவான பெயரைக் குறிப்பிட்டு, இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

நாடார் சமூகத்திற்கும், அக்குலப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளையும், கொடுமைகளையும் எதிர்த்து அய்யா வைகுண்டநாதர் தலைமையில் அறப்போராட்டம் வீறுகொண்டு எழுந்தது. ஆனால் சி.பி.எஸ்.இ. பாடநூலில் நாடார் சமூக பெண்கள் மேலாடை அணியும் உரிமை பெறுவதற்காக கிறித்துவ சமயத்தைத் தழுவியதாக சி.பி.எஸ்.இ. பாடநூலில் நஞ்சை கொட்டி இருக்கிறார்கள்.

தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சி.பி.எஸ்.இ. 9 ஆம் வகுப்புப் பாடநூலில் வரலாற்று உண்மைகளை மறைத்து, நாடார் சமூகத்தின் மீது அவதூறு சேற்றை வாரி வீசி இருப்பது மன்னிக்கவே முடியாத கொடும் செயலாகும். மத்திய பா.ஜ.க. அரசு சி.பி.எஸ்.இ., 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார்குல மக்களை தவறாகச் சித்தரிக்கும் பாடத்தை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

 

Tags: cbsemdmk chief vaiko
Previous Post

திரைப்படத்தை பார்த்துவிட்டு, சிறுவனை கடத்தி ரூ. 50 லட்சம் கேட்ட இளைஞர் கைது!

Next Post

சரியாக சாப்பிடாமல், தூங்காமல் உள்ளதால் ஸ்டாலினுக்கு உடல்நிலை பாதிப்பு – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

Related Posts

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் !
இந்தியா

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் !

February 15, 2023
சிபிஎஸ்இ தேர்வில் பெண் விடுதலைக்கு எதிரான கேள்வி-அதிமுக ஒருங்கிணைப்பாளர் கண்டனம்
Top10

சிபிஎஸ்இ தேர்வில் பெண் விடுதலைக்கு எதிரான கேள்வி-அதிமுக ஒருங்கிணைப்பாளர் கண்டனம்

December 14, 2021
சிபிஎஸ்இ  "சர்ச்சைக்குரிய கேள்வி" பதிலளித்த அனைவருக்கும் முழு மதிப்பெண்
Top10

சிபிஎஸ்இ "சர்ச்சைக்குரிய கேள்வி" பதிலளித்த அனைவருக்கும் முழு மதிப்பெண்

December 13, 2021
சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து ; 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு
TopNews

சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து ; 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

April 14, 2021
மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவி கனிகாவை பாராட்டிய பிரதமர்!
TopNews

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவி கனிகாவை பாராட்டிய பிரதமர்!

July 26, 2020
சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளியான செய்தி தவறு!
TopNews

சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளியான செய்தி தவறு!

July 9, 2020
Next Post
சரியாக சாப்பிடாமல், தூங்காமல் உள்ளதால் ஸ்டாலினுக்கு உடல்நிலை பாதிப்பு – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சரியாக சாப்பிடாமல், தூங்காமல் உள்ளதால் ஸ்டாலினுக்கு உடல்நிலை பாதிப்பு - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version