மாயமானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்தது போலத்தான் பன்னீரும் டிடிவியும் சேர்ந்தது – பொதுச்செயலாளர் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி 

மாயமானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது. பன்னீரும், டிடிவியும் ஒரு பூஜ்ஜியம். பூஜ்ஜியம் + பூஜ்ஜியம் = பூஜ்ஜியம் என்றுதான் சொல்ல வேண்டும். இது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த நிலை. பண்ருட்டி ராமச்சந்திரன் அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கவில்லை. பாமகவிற்கு விசுவாசமாக இருக்கவில்லை. தேமுதிகவிற்கும் விசுவாசமாக இருக்கவில்லை. அவர் எங்கே சென்றாலும் அந்தக் கட்சி சரிவை நோக்கி சென்றுவிடும். அதிமுகவே இவரால்தான் ஒழுங்கமைப்புடன் இருக்கிறது என்பதுபோல் பேசி வருகிறார். இவருக்கு ஒரு கழக கிளைச்செயலாளர் தகுதி கூட கிடையாது. ஓபிஎஸ்சும், டிடிவியும் இருக்கும் காணொளியில் மனோஜ் பாண்டியன் சேர்த்து அந்த மூன்று பேர் எங்கே?

மேலும் நான் முன் கூட்டிய சொன்னதுபடி, திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. கிரிக்கெட் பார்க்க சென்று சபரீசனை பார்த்துவிட்டு பேசிக்கொண்டு இருக்கிறார். திமுகவை நிர்வாகம் செய்வதே சபரீசன் தான்.

திமுக தங்களின் ஊழலை மறைக்க எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். ஆர்.எஸ். பாரதி, நாங்கள் ஆளுங்கட்சியாக இருக்கும்போதே வழக்குத் தொடுத்தார். ஆனால் விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றபோது எந்த குற்றசாட்டும் இல்லை என்று பின் வாங்கிவிட்டார்.

திமுகவில் ஊழல் நடந்திருக்கிறது அதனால்தான் அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. எல்லாத் துறைகளிலும் ஊழல்,அதனால் தான் பழனிவேல் தியாகராஜனை மாற்றியுள்ளார். அமைச்சரவையில் இருந்து நீக்கியிருந்தால் இன்னும் சில ஆடியோக்கள் வெளிவந்துவிடும் என்று பயந்து இலாக்காவை மட்டும் மாற்றியுள்ளார்கள். பொருளாதார நிபுணர், மெத்தபடித்தவர், ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் ஒருவர் இப்படி பேசியிருப்பது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

ஆளுநர் திராவிடத்திற்கு எதிராக இல்லை. திமுகவிற்கு எதிராக இருக்கிறார். இது தொண்டர்கள் வாழும் கட்சி. தலைவர்கள் வாழும் கட்சி. தொண்டர்கள்தான் தலைவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தனது கருத்துகளை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

Exit mobile version