News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் திருமணத்தை தள்ளி வைத்த வழக்கறிஞருக்கு இன்று திருமணம்

Web Team by Web Team
September 11, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் திருமணத்தை தள்ளி வைத்த வழக்கறிஞருக்கு இன்று திருமணம்
Share on FacebookShare on Twitter

தமிழகத்தின் 19 பாரம்பரிய பொருட்களுக்காக போராடி புவிசார் குறியீட்டை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பெற்றுத் தந்துள்ளார். இதற்காக தனது திருமணத்தையே ஒத்திவைத்திருந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வாங்கிய கையுடன் இன்று திருமணம் செய்கிறார்.

தமிழகத்தில் பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தனி மனிதராக ஒரு வழக்கறிஞர் தமிழகத்தின் பாரம்பரிய பொருட்களுக்காக கடந்த 19 ஆண்டுகளாக தனது உழைப்பைச் செலுத்தி 19 பொருட்களுக்கு தனி மனிதராக புவிசார் குறியீட்டைப் பெற்றுத் தந்துள்ளார்.

இதன்மீதுள்ள ஆர்வம் காரணமாக அவர் திருமணம் செய்யும் எண்ணமே இல்லாமல் இருந்து வந்தார். பின் சமீபத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்த அவர் தனது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை இன்று (11-09- 2019) மணக்கிறார். அவரது திருமணம் நடக்க உள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இந்தச் சட்டம் 1999-ல் உருவானபோது நான் வழக்கறிஞரானேன். அப்போது உருவான சட்டத்தைப் பற்றி அறிந்தபோதே நான் இந்தச் சட்டத்துக்கு என்னை அர்ப்பணித்துவிட்டேன். 2002-ல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது உடனடியாக காஞ்சிபுரம் பட்டுச் சேலைக்காக விண்ணப்பித்தேன்.

புவிசார் குறியீடு கிடைப்பதின் பயன் என்ன?

புவிசார் குறியீடு கிடைத்த பின் பயன் அதிகம், வளர்ச்சியே அதிகம் கிடைக்கும். அந்தப் பொருளுக்கான பெயரை வெளியாட்கள் யாரும் பயன்படுத்த முடியாது. அந்த அறிவுசார் சொத்துரிமை அந்த மக்களுக்கு மட்டுமே உரிமையாக இருக்கும். இதனால் போலிகள் தடுக்கப்படும். மற்றவர்கள் பயன்படுத்த தடை என்பதால் இவர்களுக்கான உற்பத்தி, தேவை அதிகரிக்கும்.

நுகர்வோர்கள் உண்மையான பொருளை வாங்கலாம். உண்மையாகத் தயாரிப்பவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்கும். உதாரணத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இந்தியா முழுவதும் பிரபலம், உலகம் முழுவதும், இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் தயாரிப்பவர்கள் அதில் மவுசுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று போட்டுக்கொள்கிறார்கள். இனி அது தடுக்கப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு என்ன தனித்தன்மை என்றால் அது பாரம்பரியமிக்கது. 1925-ல் ஆங்கிலேயர் ஒருவர் இதுகுறித்து எழுதியுள்ளார். 1940லேயே அங்கு பால்கோவாவுக்கான சொசைட்டி ஆரம்பித்து விட்டார்கள். அங்குள்ள பசுவின் பாலுக்குத் தனித்தன்மை உண்டு.

புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்:

காஞ்சிபுரம் பட்டு
பவானி ஜமக்காளம்
மதுரை சுங்கிடி புடவை
ஆரணிப் பட்டு
சேலம் வெண்பட்டு
கோவை போரா காட்டன்
தஞ்சை தலையாட்டி பொம்மை
தஞ்சை வீணை
தஞ்சை ஓவியம்
நாச்சியார்குளம் குத்துவிளக்கு
தஞ்சாவூர் தட்டு
பத்தமடை பாய்
மாமல்லபுரம் கற்சிற்பம்
திருப்புவனம் பட்டு
திண்டுக்கல் பூட்டு
காரைக்குடி கண்ணாடி சேலை
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

புவிசார் குறியீடு பெற விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்?

அப்படி ஆர்வம் இருப்பவர்கள் தாரளமாக என்னை அணுகலாம். நான் எவ்விதக் கட்டணமும் இன்றி குறியீடு பெற்றுத் தரத் தயாராக இருக்கிறேன். அவர்கள் தனிப்பட்ட ஆட்களாக வர முடியாது. சங்கமாக வந்தால் உதவத் தயார். அனைத்துப் பொருட்களுக்கும் வாங்க முடியாது. அந்தப் பொருட்களுக்கு உண்மையான தனிச்சிறப்பு இருக்க வேண்டும். அது விவசாயப் பொருட்களாக, வேளாண் பொருட்களாக , கைவினை, இயற்கைப்பொருட்களாக இருக்க வேண்டும். அந்தப் பொருட்களுக்கு வரலாற்றுச் சான்று கட்டாயம் இருக்கவேண்டும்.

மேலும் 15 பொருட்களுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். சில பொருட்களை முடிவு செய்துள்ளேன். மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஓசூர் ரோஸ், சேலம் மாம்பழம் என ஒரு பட்டியலே இருக்கிறது.

திருமணத்தைத் தள்ளிப்போடக் காரணம் என்ன?

இதில் ஈடுபட்டதால் என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. தற்போது முழுமையான திருப்தியான மனநிலையில் இருக்கிறேன்.

உங்களுக்கு விருது எதுவும் கிடைத்துள்ளதா?

தேசிய விருது கொடுத்தார்கள், அது விருதுப்போன்றது அல்ல, அதிகமாக புவிசார் குறியீடுகளை பெற்றது யார் என தேர்வு செய்தனர். நான் அதிகமாக வாங்கியிருந்ததால் எனக்கு அந்த விருது கொடுக்கப்பட்டது

உங்கள் வருங்கால மனைவி இந்தத் துறையில் ஆர்வம் உள்ளவரா?

நான் இதுவரை அவரிடம் பேசியதே இல்லை. எங்கள் திருமணம் பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம். இனிமேல்தான் திருமணத்துக்குப் பின் அவரிடம் பேசுவேன். என கூறியுள்ளார்

Tags: geographicallawyermarriagenewsj
Previous Post

தலைமைச் செயலகத்துக்குள் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Next Post

துணை முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலின் ஏன் வெளிநாடு சென்றார்?: அமைச்சர் ஜெயக்குமார்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
துணை முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலின் ஏன் வெளிநாடு சென்றார்?: அமைச்சர் ஜெயக்குமார்

துணை முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலின் ஏன் வெளிநாடு சென்றார்?: அமைச்சர் ஜெயக்குமார்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version