அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..மார்ச் 9ஆம் தேதி..தலைமை தாங்குகிறார் எதிர்க்கட்சித் தலைவர்!

மார்ச் 9-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மார்ச் 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 75 அதிமுக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளில் விடியா திமுக அரசு அக்கறை காட்டாமல் மெத்தன போக்கில் செயல்பட்டு வருவது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

Exit mobile version