பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் மாரத்தான் போட்டி

மோடி அரசின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற “மோடிக்கான ஓட்டமும், நடையும்” என்ற மாரத்தான் போட்டியில், ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை, மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கிலும், பிரதமர் மோடியின் நல்லாட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற நோக்கிலும், பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில், பா.ஜ.க தொழில் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட 3 கிலோ மீட்டர் தூரத்துக்கான மாரத்தான் போட்டியில், 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இப்போட்டியில் பங்கேற்றவர்கள், மீண்டும் மோடி, வேண்டும் மோடி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பிவாறும் ஓடினர்.

Exit mobile version