செங்கல்பட்டு நகரை கதிகலங்க வைத்த பல கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி பட்டரைவாக்கம் சிவா உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்…
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ,கூடுவாஞ்சேரி ,மறைமலைநகர் , படாளம், மதுராந்தகம் உள்ளிட்ட பல பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கொலை, பல கொள்ளை வழக்குகள், வழிப்பறி, ஆள் கடத்தல் , கட்டப்பஞ்சாயத்து போன்ற 25க்கும் மேற்பட்ட
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி பட்டரைவாக்கம் சிவாவை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் ரவுடி சிவா பெட்ரோல் பங்க் மற்றும் வங்கிப் போன்றவற்றில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது காவல்துறைக்கு தெரியவந்தது. செங்கல்பட்டு தாலுக்கா காவல் உதவி ஆய்வாளர் சங்கர், தலைமை காவலர் சரவணன் காவலர்கள் இளையரசு மற்றும்
பார்த்திபன் ஆகியோர்கள் ரோந்து செல்லும் போது பட்டரைவாக்கம் கூட்டு சாலையில் மறைவான இடத்தில் ரவுடி சிவா மற்றும் கூட்டாளிகள் இருந்ததை கண்ட காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். கைது செய்யப்பட்ட பட்டரைவாக்கம் சிவா , வல்லம்
பகுதியை சேர்ந்த வினோத் , நவீன் ராஜ் , அன்பு , நாகராஜ் ஆகியவர்களை செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் கொண்டு
விசாரணையை தொடங்கினர்.
பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினர் கண்களில் மண்ணை தூவி வந்த பட்டரைவாக்கம் சிவா கைதால் பொது மக்கள் நிம்மதி அடைந்தனர். அரசியல் பின்புலம் உள்ள பட்டரைவாக்கம் சிவா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு குண்டர்
சட்டத்தை உடைத்து பலமுறை வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதியதாக
பொறுப்பேற்ற காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் இதைப் பற்றி கூறுகையில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் பயங்கர ரவுடிகளை விரைவில் அடக்குவோம் என தெரிவித்துள்ளார்.
Discussion about this post