காரைக்கால் அம்மையார் திருக்கோவிலில் மாங்கனி திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெறுவதை ஒட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரி மாவட்டம் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் வரும் 13 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் மாங்கனி விழா தொடங்கவுள்ளது. முதல் நிகழ்வாக மாப்பிள்ளை அழைப்பு, அதனை தொடர்ந்து 14 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து சிவபெருமான் பிட்சாஷண மூர்த்தியாக எழுந்தருளி வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வான 16 ஆம் தேதி மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சிவபெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று அடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் வீதியுலா நடைபெறும். அப்போது பக்தர்கள் வேண்டுதலுக்கான மாங்கனி வீசியேறியும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

Exit mobile version