மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதால் சிறுவன் உயிரிழப்பு

சென்னை கொருக்குப்பேட்டையில் 3 வயது சிறுவன் மாஞ்சா நூலில், சிக்கி, கழுத்து அறுப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால், தனது 3 வயது மகன் அபினேஷ் ராவ்வுடன் தண்டையார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் இருவரும் சென்ற போது மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தில் சிக்கியது. ரத்த வெள்ளத்தில் துடித்த அபினேஷ்ராவை அவரது தந்தை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து, ஆர்.கே நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, நிரஞ்சனா குமார், லோகேஷ், லோகநாதன், நாகராஜ் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

Exit mobile version