ஆட்டோவை திருடி பாகம் பாகமாக பிரித்து விற்பனை செய்தவர் கைது

சென்னையில் ஆட்டோக்களை திருடி பாகம் பாகமாக பிரித்து விற்பனை செய்தவரை, சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..

சென்னையை அடுத்த திருவொற்றியூர் பகுதியில் உள்ள எழுத்துக்காரன் தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர், தனது ஆட்டோ காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதேபோல முன்பும் ஆட்டோக்கள் காணாமல் போனதாக புகார் வந்ததையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் வைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது ஒருவர் ஆட்டோ ஓட்டிச்செல்வது கண்டுபிடிக்கபட்டது. ஆட்டோவை பின்தொடர்ந்ததில், அவர் சைதாப்பேட்டை பாரதி நகரைச்சேர்ந்த முருகன் என்பது கண்டறியப்பட்டது. முருகனை கைது செய்து போலீசார் விசாரித்ததில், ஆட்டோவை திருடி பாகம் பாகமாக பிரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பல்வேறு குற்றச்சம்பவங்களை கண்டுபிடிப்பதில் சிசிடிவி பெருந்துணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version