சென்னையில் ஒரே இரவில் 18 செல்போன்களை பறித்த நபர் கைது

சென்னையில் ஒரே இரவில் 18 செல்போன்களை பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒருவரிடமிருந்து, மர்ம நபர்கள் இருவர், செல்போனை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். இதை அடுத்து அவர்களே, செல்போன் பறித்து சென்றவர்களை துரத்தி சென்று, ஒருவரை பிடித்துள்ளனர். மற்ற ஒருவர் தப்பி சென்றுவிட்டார். பின்னர், பிடிபட்ட நபரை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் பாலாஜி என்பதும், இவரும் கார்த்தி என்பவரும் சேர்ந்து, ஒரே இரவில் 18 பேரிடம் தொடர்ச்சியாக செல்போன் பறித்ததை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதை அடுத்து, அவரிடம் இருந்து 18 செல்போன்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி சென்ற கார்த்தியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version