இந்திய ராணுவத்தில் பணிபுரிய தோனிக்கு அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மகேந்திர சிங் தோனி ராணுவத்தின் பாராசூட் பிரிவில் இணைந்து பணியாற்ற இந்திய ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.

ராணுவத் தளபதி பிபின் ராவத் இதற்கான அனுமதியை வழங்கினார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மகேந்திர சிங் தோனி இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினட் கர்னலாக உள்ளார். ராணுவத்தின் விதிப்படி கவுரவ பதவியில் இருப்பவர்கள் ராணுவம் தொடர்பான பயிற்சியில் பங்கேற்க முடியாது.

இந்நிலையில் தன்னை ராணுவத்தில் பணியாற்ற அனுமதிக்குமாறு மகேந்திர சிங் தோனி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற இந்திய ராணுவம் பாராசூட் பிரிவில் இணைந்து பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு தோனி ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version