நாகை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை; 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு

நாகை – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை தொடங்குவது குறித்து 4 வாரங்களில் முடிவெடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, பணிகளை தொடங்குவது குறித்து 4 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

Exit mobile version