ஔடதம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஔடதம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஔடதம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜ்மல் கான் என்பவர், படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், படத்தை வெளியிட தடை விதித்தது.

இந்த நிலையில் போலி ஆவணங்கள் மூலம் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆவணங்களை சோதனை செய்தது. இதனையடுத்து ஆவணங்கள் போலியானது என கூறி படத்திற்கான தடையை நீக்கி உத்தரவிட்டது.

Exit mobile version