காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

திமுக ஆட்சியின் போது காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில், காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியின் பல்லாவரம் மற்றும் போரூர் கிளைகளில், 20 கோடியே 69 லட்சம் ரூபாய் அளவிற்கு, கடன் மோசடி நடைபெற்றது. கடந்த 8 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கை, சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல் குமார் அமர்வு, வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version