“ஒருதாய் மக்கள் நாம் என்போம்..ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்”.. பட்டையை கிளப்பப்போகும் மதுரை மாநாடு! ஜோதி ஓட்டம் ஸ்டார்ட்!

மதுரையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தினை கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.
சென்னை ராயப்பேடையில் உள்ள அதிமுக தலைமை அலுவகலத்திற்கு வந்த கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவவி ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனை தொடர்ந்து மதுரையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரை வரையிலான ஜோதி ஓட்டத்தை கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த தொடர் ஜோதி ஓட்டம் மதுரை வரை பயணித்து இருபதாம் தேதி மாநாட்டு திடலை அடைய உள்ளது.

Exit mobile version