மதுரை நூலகம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா வலியுறுத்தல்

80 கோடியில் துவங்கி 210 கோடி ரூபாய்க்கு வந்துள்ள மதுரை நூலகம் சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மதுரையில் திறக்கப்பட்டுள்ள நூலகத்தில் திமுக தலைவர்களின் புத்தகங்கள் மட்டுமே வாங்கி வைத்திருப்பதாகவும், மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கியது போல் தெரியவில்லை என்று விமர்சித்தார்.

Exit mobile version