ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் கொடியேற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்ற விழா இன்று நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகாசிவராத்திரியன்று ராமநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும்.
Discussion about this post