முதல்வரை சந்தித்த லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்காகவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்காகவும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்துக்கு வருமாறு அழைப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர், பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தகளில் கையெழுத்திட்டார்.

லண்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் பழனிசாமி தொழில் முதலீட்டாளர்களுடன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றடைந்தார்.

இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் லண்டன் பயணத்தின் போது, ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவி டாக்டர் சாமுண்டீஸ்வரி குப்புசாமி, முதலமைச்சரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் உள்ள நில நிர்வாகம் மற்றும் வருவாய் துறையில் ஆராய்ச்சி செய்த கடிதத்தை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Exit mobile version