News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

ஜூலை 5-வரை ஊரடங்கு நீட்டிப்பு-தளர்வு என்ன? எந்தெந்த செயல்பாடுகளுக்கு அனுமதி??

Web Team by Web Team
June 25, 2021
in Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 3 mins read
0
ஜூலை 5-வரை ஊரடங்கு நீட்டிப்பு-தளர்வு என்ன? எந்தெந்த செயல்பாடுகளுக்கு அனுமதி??
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் மாவட்டங்களில்‌ உள்ள நோய்த்‌ தொற்று பரவலின்‌ அடிப்படையில்‌, மாவட்டங்கள்‌ 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில்‌ உள்ள ஊரடங்கு 28- 6-2021 அன்று காலை 6 மணியுடன்‌ முடிவடையும்‌ நிலையில்‌, தமிழ்நாட்டில்‌ பெரும்பான்மையான மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று பரவல்‌ குறைந்துள்ளதைத்‌ தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன்‌ 
ஊரடங்கு 5- 7- 2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது..

வகை 1 – (11 மாவட்டங்கள்‌)

கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌,நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை

வகை 1ல்‌ உள்ள மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று குறைந்து வருவதைக்‌ கருத்தில்‌ கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள
சில கடைகள்‌ / செயல்பாடுகளுக்கு மாலை 7.00 மணி வரை நேரத்‌ தளர்வு அளிப்பதுடன்‌, கூடுதலாக பின்வரும்‌ செயல்பாடுகளும்‌ அனுமதிக்கப்படுகிறது.

image

*தேநீர்க்‌ கடைகள்,சாலையோர உணவுக்‌ கடைகளில்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.

காலை 9.00 மணி முதல்‌ மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌ கடைகள்:

image

*மின்‌ பொருட்கள்‌, பல்புகள்‌, கேபிள்கள்‌, ஸ்விட்சுகள்‌ மற்றும்‌ ஒயர்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌, ஹார்டுவேர்‌ கடைகள்‌, கல்விப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ எழுதுபொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ ,காலணிகள்‌ விற்பனை கடைகள்,பாத்திரக்‌ கடைகள்‌, பேன்ஸி, அழகு சாதனப்‌ பொருட்கள்‌,போட்டோ/ வீடியோ, சலவை, தையல்‌ அச்சகங்கள்‌, ஜெராக்ஸ்‌,கடைகள்‌,மிக்சி, கிரைண்டர்‌, தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ விற்பனை மற்றும்‌ பழுதுநீக்கும்‌ கடைகள்‌ ,வாகன விநியோகஸ்தர்களது விற்பனை மற்றும்‌ வாகன பழுதுபார்க்கும்‌ மையங்கள்‌ வாகனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்,அலைபேசி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌,கணினி வன்பொருட்கள்‌, மென்பொருட்கள்‌, மின்னனு சாதனங்களின்‌ உதிரிபாகங்கள்‌,கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

image

image

சார்‌ பதிவாளர்‌ அலுவலகங்கள்‌ ,அரசின்‌ அனைத்து அத்தியாவசியத்‌ துறைகள்‌, 100% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. இதர அரசு அலுவலகங்கள்‌, 50% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

image

அனைத்து தனியார்‌ அலுவலகங்கள்‌ மற்றும்‌ நிறுவனங்கள்‌, வங்கிகள்‌ மற்றும்‌ காப்பீட்டு நிறுவனங்கள்‌, தானியங்கி பணம்‌(ATM)
வழங்கும்‌ சேவைகள்‌,இந்திய பங்கு மற்றும்‌ பரிவர்த்தனை வாரியம்‌(SEBI) 50% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

image

ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 100% பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌.

இதர தொழிற்சாலைகள்‌ 38% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

தகவல்‌ தொழில்‌ நுட்பம்‌ / தகவல்‌ தொழில்‌ நுட்ப சேவை நிறுவனங்கள்‌ 20% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வீட்டு வசதி நிறுவனம்‌ , வங்கி சாரா நிதி நிறுவனங்கள்‌,குறு நிதி நிறுவனங்கள்‌ 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கட்டுமானப்‌ பணிகள்‌ மேற்கொள்ளும்‌ நிறுவனங்களின்‌ அலுவலங்கள்‌ 33 % பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.அனைத்து வகையான கட்டுமானப்‌ பணிகள்‌ அனுமதி உண்டு..

image

அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌ குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50 % வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அனுமதிக்க வேண்டும்‌ என்ற நிபந்தனையுடன்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதி உள்ளது.

image

image

காலை 6.00 மணி முதல்‌ மாலை 9.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள்‌ இயங்கவும்‌, பார்வையாளர்கள்‌ இல்லாமல்‌, திறந்த வெளியில்‌ விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடத்தவும்‌, அனுமதி.

பள்ளி, கல்லூரிகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ பயிற்சி நிலையங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.

image

அரசு பூங்காக்கள்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள பூங்காக்கள்‌, விளையாட்டு திடல்கள்‌ காலை 6.00 மணி முதல்‌ காலை 9.00 மணி வரை நடை பயிற்சிக்காக மட்டும்‌ செயல்பட அனுமதி.

இனிப்பு மற்றும்‌ காரவகை விற்பனை செய்யும்‌ கடைகளில்‌ பார்சல்‌ சேவைகள்‌ மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு
9.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌.

இ- சேவை மையங்கள்‌ வழக்கம்‌ போல இயங்கும்‌.

மின்‌ வணிகம்‌ மூலம்‌ உணவு விநியோகம்‌ செய்யும்‌ நிறுவனங்களும்‌, உணவகங்கள்‌ மற்றும்‌ அடுமணைகளில்‌ 
பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌. இதர மின்‌ வணிக சேவை நிறுவனங்கள்‌ அனைத்தும்‌ இயங்கலாம்‌.

சினிமாத்துறையில் திரைப்படத்‌ தயாரிப்புக்கு பின்னர்‌ உள்ள பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.

திறந்த வெளியில்‌, திரைப்படம்‌ மற்றும்‌ சின்னத்திரை படப்பிடிப்புகள்‌ கலைஞர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ உட்பட 100 நபர்கள்‌ மட்டும்‌ கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர்‌ பங்கேற்கலாம்‌ என்ற நிபந்தனையுடன்‌ அனுமதிக்கப்படும்‌.

image

திரையரங்குகளில்‌, தொடர்புடைய வட்டாட்சியரின்‌ அனுமதி பெற்று வாரத்தில்‌ ஒரு நாள்‌ மட்டும்‌ பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.

 

வகை 2 – (23 மாவட்டங்கள்‌)

அரியலூர்‌, கடலூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி,கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை,இராமநாதபுரம்‌, இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி,திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, தூத்துக்குடி,திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்‌, வேலூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌.

வகை 2-ல்‌ உள்ள மாவட்டங்களில்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள்‌ / செயல்பாடுகளுக்கு மாலை 7.00 மணி வரை நேரத்‌ தளர்வு அளிப்பதுடன்‌, கூடுதலாக கீழ்க்காணும்  செயல்பாடுகளும்‌ அனுமதிக்கப்படுகின்றன.

 

பாத்திரக்‌ கடைகள்‌, பேன்ஸி, அழகு சாதனப்‌ பொருட்கள்‌,போட்டோ/ வீடியோ, சலவை, தையல்‌ அச்சகங்கள்‌, ஜெராக்ஸ்‌
கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

அலைபேசி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00
மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

image

கணினி வன்பொருட்கள்‌, மென்பொருட்கள்‌, மின்னனு சாதனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ 
விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

image

 சாலையோர உணவுக்‌ கடைகளில்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌.

அனைத்து தனியார்‌ நிறுவனங்கள்‌, 50% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. கட்டுமானப்‌ பணிகள்‌ மேற்கொள்ளும்‌ நிறுவனங்களின்‌ அலுவலங்கள்‌ 50 சதவிகித பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மாவட்டத்திற்குள்‌ பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, குளிர்‌ சாதன வசதி
இல்லாமலும்‌, 50% இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, குளிர்‌
சாதன வசதி இல்லாமலும்‌, 50% இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

 

வகை 3 – (4 மாவட்டங்கள்‌)

சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு

வகை 3-ல்‌ உள்ள மாவட்டங்களில்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத்‌ தளர்வுகளுடன்‌ கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

அனைத்துக்‌ துணிக்கடைகள்‌, குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

image

அனைத்து நகைக்கடைகள்‌, குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌
காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

image

வணிக வளாகங்கள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட
அனுமதிக்கப்படும்‌. எனினும்‌, வணிக வளாகங்களில்‌ உள்ள உணவகங்களில்‌ பார்சல்‌ உணவு மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.
திரையரங்குகள்‌ மற்றும்‌ விளையாட்டுக்‌ கூடங்களுக்கு அனுமதி இல்லை.

கோயில்கள்‌, மசூதிகள்‌, தேவாலயங்கள்‌, தர்காக்கள்‌ உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும்‌ நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌. அர்ச்சனை, திருவிழாக்கள்‌ மற்றும்‌
குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள்‌ இயங்கவும்‌, பார்வையாளர்கள்‌ இல்லாமல்‌, திறந்த வெளியில்‌ விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடத்தவும்‌, அனுமதிக்கப்படும்‌.

 

வகை – 2 மற்றும்‌ 3-ல்‌ உள்ள மாவட்டங்களில்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத்‌ தளர்வுகளுடன்‌,
கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

தனியார்‌ பாதுகாப்பு சேவை நிறுவனங்கள்‌ மற்றும்‌ அலுவலகம்‌, வீடுகள்‌ மற்றும்‌ அடுக்குமாடி குடியிருப்புகளில்‌
வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள்‌  இ- பதிவில்லாமல்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

image

மின்‌ பணியாளர்‌ ,பிளம்பர்கள்‌ ,கணினி மற்றும்‌ இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர்‌ மற்றும்‌ தச்சர்‌ போன்ற சுயதொழில்‌
செய்பவர்கள்‌ சேவை கோருபவர்‌ வீடுகளுக்குச்‌ சென்று பழுது நீக்கம்‌ செய்ய காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00
மணி வரை இ- பதிவில்லாமல்‌ அனுமதிக்கப்படுவர்‌.

image

அனைத்து அரசு அலுவலகங்கள்‌, 100% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வங்கிகள்‌ மற்றும்‌ காப்பீட்டு நிறுவனங்கள்‌, தானியங்கி பணம்‌ வழங்கும்‌சேவைகள்‌ 100% பணியாளர்களுடன்‌
செயல்பட அனுமதிக்கப்படும்‌. இந்திய பங்கு மற்றும்‌ பரிவர்த்தனை வாரியம்‌ மற்றும்‌ அதன்‌ செயல்பாடுகள்‌ 100% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

இதர தொழிற்சாலைகள்‌ 100% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

image

தகவல்‌ தொழில்‌ நுட்பம்‌ / தகவல்‌ தொழில்‌ நுட்ப சேவை நிறுவனங்கள்‌ 50% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வீட்டு வசதி நிறுவனம்‌ வங்கி சாரா நிதி நிறுவனங்கள்‌ , குறு நிதி நிறுவனங்கள்‌ 50சதவிகித பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. உடற்பயிற்சிக்‌ கூடங்கள்‌, யோகா பயிற்சி நிலையங்கள்‌, குளிர்‌ சாதன வசதி இல்லாமல்‌, ஒரே நேரத்தில்‌ 50% நபர்களுடன்‌ முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமாக செயல்படும்‌ நேரத்தில்‌ அனுமதிக்கப்படும்‌. அருங்காட்சியகங்கள்‌, தொல்லியல்‌ துறையின்‌ பாதுகாக்கப்பட்ட சின்னங்கள்‌, அகழ்‌ வைப்பகங்கள்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

image

அனைத்து கடற்கரைகளிலும்‌, காலை 5 மணி முதல்‌ காலை 9.00 மணி வரை நடை பயிற்சி செய்ய அனுமதிக்கப்படும்‌. தீப்பெட்டி தொழிற்சாலைகள்‌ 100% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

 

திருமணங்களுக்கான பயண அனுமதி

image

வகை 2 மற்றும்‌ 3ல்‌ உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம்‌ சார்ந்த போக்குவரத்துக்கு இ- பாஸ்‌/இ- பதிவு  இல்லாமல்‌ பயணிக்கலாம்‌.

வகை 1-ல்‌ உள்ள மாவட்டங்களுக்கிடையேயும்‌, வகை 2, 3 ஆகியவற்றில்‌ உள்ள மாவட்டங்களிலிருந்து வகை- 1-ல்‌ உள்ள மாவட்டங்களுக்கும்‌ திருமணம்‌ சார்ந்த போக்குவரத்துக்கு இ- பாஸ்‌ பெற்று அனுமதிக்கப்படும்‌.
இதற்கான இ-பாஸ்‌ திருமணம்‌ நடைபெற உள்ள
மாவட்டத்தின்‌ மாவட்ட ஆட்சியரிடமிருந்து
இணையவழியாக மணமகன்‌ /மணமகள்‌ அல்லது அவர்களது பெற்றோர்‌ விண்ணப்பித்து பெற்றுக்‌ கொள்ளலாம்‌. வகை- 1ல்‌ உள்ள மாவட்டங்களிலிருந்து வகை- 2, 3-ல்‌ உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும்‌ இ-பாஸ்‌ பெறவேண்டும்‌.

திருமண நிகழ்வுகளில்‌ 50 நபர்கள்‌ மட்டும்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்‌.

நீலகிரி மாவட்டம்‌, கொடைக்கானல்‌, ஏற்காடு, ஏலகிரி,குற்றாலம்‌ பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ- பாஸ்‌ பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

image

 

Tags: Besafeextendedjuly 5lockdownnext wavephase viserestrictionsTamilnadu
Previous Post

அவல நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டி – ஆளும் அரசின் அலட்சியப்போக்கு!!

Next Post

ஜூலை 5-வரை ஊரடங்கு நீட்டிப்பு-தளர்வு என்ன? எந்தெந்த செயல்பாடுகளுக்கு அனுமதி??

Related Posts

பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!
அரசியல்

பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!

September 22, 2023
தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! ஊட்டச்சத்து குறைபாட்டால் 25% குழந்தைகள் பாதிப்பு!
தமிழ்நாடு

தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! ஊட்டச்சத்து குறைபாட்டால் 25% குழந்தைகள் பாதிப்பு!

September 4, 2023
தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்! துரித நடவடிக்கை எடுக்குமா விடியா அரசு?
அரசியல்

தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்! துரித நடவடிக்கை எடுக்குமா விடியா அரசு?

August 24, 2023
அப்போ இம்புட்டு நாளா கஞ்சாவ அழிச்சிட்டோம்னு சொன்னது பொய்யா கோபால்!
அரசியல்

அப்போ இம்புட்டு நாளா கஞ்சாவ அழிச்சிட்டோம்னு சொன்னது பொய்யா கோபால்!

August 12, 2023
தமிழகத்தில் இருமொழி கொள்கையே அதிமுகவின் கொள்கை! யாராலும் இந்தியை திணிக்க முடியாது! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
அரசியல்

தமிழகத்தில் இருமொழி கொள்கையே அதிமுகவின் கொள்கை! யாராலும் இந்தியை திணிக்க முடியாது! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

August 11, 2023
“நிழல் தரும் இவள் பார்வை வழியெங்கும் இனி தேவை” இதயம் செயலிழந்துபோன காதலனை கைவிடாத காதலி!
தமிழ்நாடு

“நிழல் தரும் இவள் பார்வை வழியெங்கும் இனி தேவை” இதயம் செயலிழந்துபோன காதலனை கைவிடாத காதலி!

August 10, 2023
Next Post
ஜூலை 5-வரை ஊரடங்கு நீட்டிப்பு-தளர்வு என்ன? எந்தெந்த செயல்பாடுகளுக்கு அனுமதி??

ஜூலை 5-வரை ஊரடங்கு நீட்டிப்பு-தளர்வு என்ன? எந்தெந்த செயல்பாடுகளுக்கு அனுமதி??

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version