சென்னையில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனையாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மவுண்ட் ரயில் நிலையம், வேளாளர் தெரு, சூப்பர் பார், திருமலா பார், கக்கன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் அரசு அறிவித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களிலும் மது விற்பனை அமோகமாக நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கண்டுகொள்ளாத காவல்துறையால் அவர்களுக்கும் இதில் பங்கு செல்கிறதா என்ற சந்தேகமும் எழுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Exit mobile version