போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம் – பொதுச்செயலாளர் Tweet!

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது நம் அனைவரின் கடமை என்று தனது டிவிட்டர் தளத்தில் வலியுறுத்தியுள்ளார். அவரின் டிவிட்டர் பதிவு பின்வருமாறு உள்ளது.

பொதுச்செயலாளர் Tweet!

நாட்டில் பெருவாரியான குற்றச் சம்பவங்களுக்கும், நம் சமூக சீர்குலைவுக்கும் காரணமான கொடிய போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் அகற்றி, நம்மையும், நம் குடும்பத்தையும் வளத்துடன் பாதுகாத்து, போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம்; வருங்கால தலைமுறையான இளைஞர்களையும், மாணவச் செல்வங்களையும் போதையின் பாதைக்கு செல்லவிடாமல், நல்வழிப்படுத்துவது நம் கடமையென கொள்வோம்.

Exit mobile version