வழக்கறிஞர் இனி அங்கி அணிய கட்டாயமில்லை!

வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டுமென்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், கட்டாயமாக வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டும் என்ற தேசிய கம்பெனி சட்ட வாரிய உத்தரவை ரத்து செய்யக் கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய கம்பெனி சட்ட விதிகளில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக எவ்வித அதிகாரமும் வழங்கப்படாத நிலையில், வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டுமென்று உத்தரவிட முடியாது என்று தெரிவித்து, 2017ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version