வழக்கறிஞரை கொடூரமாக கொலை செய்த ரவுடி கும்பல் – சிசிடிவி காட்சிகள்

சென்னையில் வழக்கறிஞர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த ரவுடி கும்பலை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் . இவரது மனைவி ரம்யா மக்கள் ஆளும் அரசியல் கட்சி என்கின்ற பெயரில் கட்சி ஒன்றினை நடத்தி வருகிறார். அதில் ராஜேஷ் ஆலோசகராக இருந்து வந்தார். இந்த நிலையில் ஞாயிறு இரவு, ராஜேஷ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராஜேஷை கொடூரமாக கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் அடையாளம் தெரியாத 7 நபர்கள் தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணிந்து கொண்டு, சர்வ சாதாரணமாக நடந்து வந்து வெட்டிக் கொலை செய்தது பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சியை கொண்டு 3 முக்கிய ரவுடி கும்பலை குறிவைத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version