தொடர் மழையால் உதகை -அவலாஞ்சி சாலையில் மீண்டும் நிலச்சரிவு

தொடர் மழையால், உதகை – அவலாஞ்சி சாலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொடர் மழையால், உதகை – எமரால்டு சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும், துணை ராணுவத்திரும் ஈடுபட்டுள்ளனர். கோவை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட JCP வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உதகை, அவலாஞ்சி, எமரால்டு, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version