மக்களின் தேவைகளை தைரியமாக எடுத்து கூறுபவர் கிருஷ்ணசாமி: ராஜேந்திர பாலாஜி

தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பினால், விருதுநகர் மட்டுமின்றி தென்மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நன்மை ஏற்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின்பு அப்பகுதிகளில் பிரசாரத்தை துவக்கினர்.

கூட்டத்தில் பேசிய அவர், மக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் வீரமாக பேசக்கூடிய வல்லமை படைத்தவர் கிருஷ்ணசாமி என புகழாரம் சூட்டினார். அவரை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பினால், விருதுநகர் மட்டுமின்றி, தென்மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நன்மை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version