குவாரி ஊழலில் சிக்கிய கே.என்.நேரு! சொந்தக் கட்சி MLA-வின் ஆடியோ லீக்!

திருச்சியில் தன்னைவிட யாரும் பணக்காரர்கள் இருக்கக்கூடாது என்று நினைத்து திமுக அமைச்சர் நேரு, குவாரி வழக்கில் தன்னை சிக்க வைத்துள்ளதாக ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில், ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான கல் குவாரிக்கு வருவாய்த் துறை 23 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இந்நிலையில் இதற்கு திமுக அமைச்சர் நேரு தான் காரணம் என கூறி திமுக எம்எல்ஏ பழனியாண்டி பத்திரிக்கையாளர் ஒருவரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த திமுக ஆட்சியில் தன்னை கொலை வழக்கிலும், தற்போதைய ஆட்சியில் குவாரி வழக்கிலும் திமுக அமைச்சர் நேரு தன்னை சிக்க வைத்திருப்பதாக திமுக எம்எல்ஏ பழனியாண்டி குற்றம் சாட்டியுள்ளார்.

 

Exit mobile version