கேரளாவில் இன்று முழு அடைப்பு – தமிழக எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தமிழக எல்லையில் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

 

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாட்டை கண்டித்து அம்மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தொடர் பதற்றம் காரணமாக கேரள, தமிழக எல்லையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையோர கிராமமான நெல்லை மாவட்டம் புளியரையிலேயே சரக்கு லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. பேருந்து போக்குவரத்தும் தடைப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் சோதனைச்சாவடிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சட்ட ஒழுங்கு பிரச்சனை எழாமல் தடுக்கும் விதமாக பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version