மீண்டும் போலீஸ் வேடத்தில் மிரட்டவரும் கீர்த்தி சுரேஷ்!

keerthi suresh

சாணிக்காயிதம் திரைப்படத்தை அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

இரும்புத்திரை, விஸ்வாசம் உள்பட பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ், ‘சைரன்’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, யோகி பாபு நடிக்கின்றனர். இதில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

இதற்கு முன்பு ஓடிடியில் வெளியான ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் அவர் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நேர்மையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

Exit mobile version