கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை மணிமண்டபம் பணிகளை துவங்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் வலியுறுத்தல்!

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மணிமண்டபம் பணிகளை துவங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் சுதந்திரப் போராட்ட வீரர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிவும் தருவாயில் இருப்பதால், ஏற்கனவே இந்த இடம் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான இடம் என்பதால் அந்தத் துறை இடம் குத்தகைக்கு பெற்று தற்போது நிலுவை உள்ள பணிகளை மேற்கொண்டு மணிமண்டபத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version