சமூக வலைதளம் மூலம் பெண்களிடம் பழகி நகை,பணம் கொள்ளை

சமூக வலைதளம் மூலம் பெண்களிடம் பழகி நகைகள் மற்றும் பணத்தை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ராதிகா மற்றும் செண்பகபவானி ஆகிய இருவரும், தங்களின் நகைகளை மர்ம நபர்கள் ஏமாற்றி திருடி சென்றுவிட்டதாக சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து பெண்களிடம் பேசி ஏமாற்றிய நபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். மொபைல் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் பெண்களிடம் பேசியது பெரியார் நகரை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அமீர்பாளையத்தை சேர்ந்த நவீன் குமார் என்பது தெரியவந்தது. சமூக வலைதளம் மற்றும் மொபைலில் செயலியின் உதவியோடு பெண் குரலில் பேசி, இருவரும் நகை பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 61 சவரன் தங்க நகைகள் மற்றும் மூன்று லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version