அதிமுக இருக்காது என்றவர்களுக்கு இந்நிகழ்வு ஒரு சம்பட்டி அடி – அமைச்சர் ஜெயகுமார்

அதிமுக துவங்கிய 47 ஆவது ஆண்டு விழா ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இந்த இயக்கம் இருக்காது என்றவர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு சம்பட்டி அடி என்றும் .

மூன்று ஆண்டுகள் கழித்து 50 வது ஆண்டு விழா. 100 வது ஆண்டுவிழாவையும் நாங்கள் தான் கொண்டாடுவோம் என்று உறுதிபட தெரிவித்தார்.

மேலும், டி டிவி தினகரன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்து விட்டு மீண்டும் போட்டி இட்டு வெற்றி பெற முடியுமா எனவும் சவால் விடுத்தார்.

ஊழலின் பிம்பமான திமுக விற்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்காள் என தெரிவித்தார்.

மீனவர்கள் திசைதெரியாமல் சென்றதற்கு இலங்கை அரசு அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version