தடம் புரண்ட ஜன் சதாப்தி ரயில்! சென்னை சென்ட்ரலில் பரபரப்பு!

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் தண்டவாளத்தில் ஜன் சதாப்தி விரைவு ரயில்தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஜன் சதாப்தி விரைவு ரயில் பயணிகளை இறக்கி விட்டு அங்கிருந்து பேசின் பிரிட்ஜ் ரயில்வே பணிமனைக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சென்றது அப்போது அந்த ரயில் தடம் புரண்டது இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தடம் புரண்ட ரயிலை சரி செய்யும் பணி மூன்று மணி நேரமாக நடைபெற்று அதன் பிறகு ரயில் பேஷன் பிரிட்ஜ் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திடீரென ரயில் தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லக்கூடிய ரயில்களை மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது தடம் புரண்ட ரயிலை மூன்று மணி நேரம் ரயில்வே ஊழியர்கள் பழுதை நீக்கி அதிகாலை 3 மணி்க்கு சரி செய்து ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version