“150 வகை பலா, 150 விதமான சுவை” பண்ருட்டியில் பலா திருவிழா!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே “150 வகை பலா, 150 விதமான சுவை” என்ற தலைப்பில் மாபெரும் பலா திருவிழா நடைபெற்றது. பத்திரக்கோட்டையில் நடைபெற்ற இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமன்றி புதுச்சேரி உட்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது பண்ருட்டி பலா, ஆயிரம் காய்ச்சி பலா, செந்தூரம் பலா, மிருது பலா உட்பட 150 வகையான பலாப்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் பார்வையிட்டு கண்டுகளித்தனர். மேலும் ஏராளமான பெண்கள், பலாப்பழத்தில் சிப்ஸ், ஜூஸ் உள்ளிட்ட உணவு பொருட்களை சமைத்து அசத்தினர்.
YouTube video player

Exit mobile version