மத்திய பிரதேச முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி வீட்டில் சோதனை

மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு அதிகாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு பணி அதிகாரியான பிரவீன் காக்கர் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 3 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவரது வீடு மட்டுமல்லாமல், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version