செப்டம்பர் 2-ல் விண்ணில் பாய இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

நிலவின் தென் துருவத்தில் தரையிரங்கியதன் மூலம் விண்வெளித்துறையில் வல்லரசாகிய இந்தியா, சுட்டெரிக்கும் சூரியன் குறித்து ஆய்வு செய்ய போகிறது. அதற்காக ஆதித்யா L – 1 விண்கலம் தயார் நிலையில் உள்ளது. தற்போது அதிலுள்ள சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்……

“கப்பு முக்கியம் பிகிலு” அப்டின்ற மாதிரி எத்தனை முறை தோற்றாலும் தொடர் முயற்சியால் யாருமே தொடாத நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் விக்ரம் லேண்டர் தரையிரங்கியது. இதன் காரணமாக உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் தான் அதிகமாகிவுள்ளது.

அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக 10 வினாடி கூட சரியா பார்க்க முடியாத சூரியன் மேல நம்முடைய இஸ்ரோ விஞ்ஞானிகளுடைய கண்பட்டிருக்கிறது.

450 கோடி ஆண்டுகளுக்கு மேல் வயதாகும் சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனை ஆராய்ச்சி செய்வதற்கு PSLVC 57 ராக்கெட் மூலம் ஆதித்யா L -1 விண்கலத்தை
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இஸ்ரோ விண்ணில் ஏவவுள்ளது.

சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெகிரான்ஜியன் புள்ளி 1 ல் ஆதித்யா L -1 விண்கலம் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கும் மேல் ஆகும்.

ஆதித்யா L 1-ல் சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய Visible Emission Line Coronagraph என்ற தொலைநோக்கி, Solar Ultraviolet Imaging Telescope என்ற தொலைநோக்கி, Aditya Solar wind Particle Experiment என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் Plasma Analyser Package for Aditya, சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் Solar Low Energy X-ray Spectrometer, வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் High Energy L1 Orbiting X-ray Spectrometer, கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற 7 முக்கிய கருவிகள் உள்ளன.

ஆதித்யா L 1 ஆய்வுத் திட்டத்தின் முழு பணிகளும், எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியாவினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சூரியன் உதிப்பதையும், மறைவதையும் பல கோடி கிலோமீட்டரிலிருந்து ரசிக்கும் நாம், இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியால் யாரும் அரியாத பல உண்மைகளை உலகமே அறிந்து கொள்ளும் விதமாக உரக்க சொல்ல போகிறது.

Exit mobile version