ஐ.எஸ். ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3சக்கர வாகனத்தில் சி4 வெடிபொருட்களுடன் 3 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கல்முனை அருகே குண்டுவெடிப்பு நடந்த சாய்ந்த மருது என்ற இடத்தில் இருந்து 15 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் சிறார்கள், 3 பெண்கள் மற்றும் 6 பேர் ஆண்களாவர். இதுவரை 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version