ஐபிஎல் பைனல்: சென்னை – மும்பை அணிகள் நாளை பலப்பரீட்சை…

மிகுந்த எதிர்பார்ப்புடன் நாளை நடைபெற இருக்கும் 12 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்கிய 12வது ஐபிஎல் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் சென்னை, மும்பை, டெல்லி, மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

இதனையடுத்து நடந்த முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் சென்னையை வீழ்த்திய ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ஹைதரபாத்தை வீழ்த்திய டெல்லி, இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில் சென்னையுடன் விளையாடியது. இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கடந்த முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு தொடரில் மும்பைக்கு எதிராக விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இறுதி போட்டியில் மீண்டும் மும்பையை எதிர்கொள்கிறது. இரு அணிகளும்
தலா மூன்று முறை கோப்பை கைப்பற்றிய நிலையில், 4வது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி ஹைதராபாத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version