சென்னையில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாகவும் பொதுமக்கள் சாலை விதிகளை மதித்து நடக்கவும் மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தின் படி சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சாலை விதிகளை மீறியவர்களுக்கு புதிய மசோதாவின் படி அபராதம் விதித்தனர். பலமடங்கு அபராதம் விதிக்கப்படுவதால் விதிமீறல்கள் குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version