உளவுத்துறை எச்சரிக்கையால் மேட்டூர் அணையில் சோதனை

உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, மேட்டூர் அணையை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனையின் போது மழை பெய்ததால் சோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையம் பகுதிகளில் இன்று சோதனை நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். வெடிகுண்டு நிபுணர்களின் சோதனையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version