தமிழில் அறிவிப்பு வெளியிட விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை விமான நிலையம் வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து புறப்படும் பல சர்வதேச விமானங்களில் தமிழில் அறிவிப்பு இருப்பதாகவும், இந்திய விமான நிறுவனங்கள் தமிழில் அறிவிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து, சென்னை வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், சென்னை வந்துசெல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனுக்கு, மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழில் அறிவிப்பு வெளியிட விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version